புதன், 24 அக்டோபர், 2012

படைப்பு!- காரஞ்சன்(சேஷ்)

                                                       
                                                                         படைப்பு!


படைத்தவனோ….
கொடியிடைதாளா
வடிவு தந்தெம்மை
உருளவிட்டான்
தரையினிலே! 

படைப்பவனோ …
பூசை முடிவினிலே
ஓசைவர ஓங்கிஎமை
உடைக்கின்றான்
சாலையிலே!

 உடைந்தழும் என்னாலே
உருளுகின்றார் பலர்தரையில்!
உருளுகிறது எம்தலைதான்
உருள்பவரின் மத்தியிலும்!

உடைபடவா பிறந்தோம்?
உரிய இடமளித்தால்
இடருண்டோ எம்மாலே?
இக்கணமே சிந்திப்பீர்!
                                        -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  கூகிளுக்கு நன்றி!

21 கருத்துகள்:

  1. சரியான கேள்வியைத் தான் கேட்டிருக்கிறது பூசணி!

    நல்ல கவிதை நண்பரே. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. உடைந்தழும் என்னாலே
    உருளுகின்றார் பலர்தரையில்!

    உடலுக்கு நலமான காயை உடைப்பது நலமோ? அதனாலும் மண்டை உடைபடுவதும் தகுமோ?

    பதிலளிநீக்கு
  3. நேற்றைய தினம் பயணம் செய்யும்போது சாலையெங்கும் உடைக்கப்பட்ட பூசணிக்காய்களைக் காண நேர்ந்தது! அதன் வெளிப்பாடுதான் இக்கவிதை!

    பதிலளிநீக்கு
  4. ஆயுதபூசை படைப்போ?
    காலத்திற்கேற்ற கவிதை! தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  5. உண்பதற்கும் அதே கடா தான்
    கோயிலில் பலியிடுவதர்க்கும்
    அதே கடா தான்

    ஒரு பலி இன்னொரு பலியை கேட்கிறது
    பலி கொடுக்கும்போது வலி தெரியாது
    பலியாகும்போதுதான் வலி தெரியும்

    கோயில் பூசாரி வெட்டினால்
    உயிர் இறைவனிடம் போகும்
    உடல் வயிற்ருக்குள் போகும்

    கசாப்பு கடையில் வெட்டினால்
    உயிர் வெட்டுபவரின் உணவாக
    அவர் வயிற்ருக்குள் போகும்

    இதுதான் இந்த உலகில்
    வழங்கி வரும் மரபு

    மரபுகளை மாற்ற முடியாது

    மரபுகள் மாற மனதில்
    மாற்றம் தேவை

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு விழிப்புணர்வு கவிதை! சிந்திக்க வேண்டிய விசயம்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  7. Arumaiyana thinking . nice sir
    Mugundan

    பதிலளிநீக்கு
  8. உடைபடவா பிறந்தோம்?
    உரிய இடமளித்தால்
    இடருண்டோ எம்மாலே?
    இக்கணமே சிந்திப்பீர்!

    சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் நல்லது

    பதிலளிநீக்கு
  9. வல்லவருக்கு புல்லும் ஆயுதம்
    என்பது சரிதான்
    எதையும் அருமையான கவியாக்கிவிடும்
    உங்கள் திறம் கண்டு வியக்கிறேன்
    மனம் கவர்ந்த சிந்தனை,கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. சிந்தனைக் கவிதை அருமை... பாராட்டுக்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  11. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. எளிய வரிகளில் புதிய சிந்தனை .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு