புதன், 1 மே, 2013

உழைப்பவர்க்கு ஓருதினம்!-காரஞ்சன்(சேஷ்)




வேப்பம் பூவாசம்
வீதியெங்கும் நிறைந்திருக்க

கூவி அழைத்தெங்கும்
குயிலினங்கள் மகிழ்ந்திருக்க

பல்லுருவம் காட்டும்
படர்மேகத் திரைவிலக்கி

சிவந்த விழிகளொடு
செங்கதிரோன் உதித்திருக்க

இரைதேடப் புள்ளினங்கள்
இங்குமங்கும் பறந்திருக்க

ஒளிபிறந்த காலை
ஒளிகிறதே இருளிங்கு!

அலுவலகம் செல்பவர்கள்
இன்று விடுமுறைதான்
என்றெண்ணி உறங்கிடுவார்!

அன்றாடப் பிழைப்புக்கு
அங்குமிங்கும் அலைபவர்கள்
எந்நாளும் ஒன்றென்பார்!


உழைப்பவர்க்கு ஒருதினமாய்
உதித்ததன்றோ  மேதினம்!

உழைப்பாளி அனைவருக்கும்
உரைக்கின்றேன் என்வாழ்த்தை!


மேதின வாழ்த்துக்கள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!