வியாழன், 14 ஏப்ரல், 2016

அறுபதில் பாதியாய் அமைந்த துன்முகியே!-காரஞ்சன்(சேஷ்)



நீர்வளம் பெருகி ஏர்நிலை உயர்ந்திட
உறுதுயர் களைய உள்ளங்கள் உருகிட
ஊர்கள் அனைத்தும் உயர்நிலை அடைந்திட
வருவாய் பெருகி வறுமை அகன்றிட
ஊறிடும் பாசத்தால் உறவுகள் பெருகிட
பேரொடு புகழும் பெருவாழ்வும் பெற்றிட
அறுபதில் பாதியாய் அமைந்த துன்முகியே
பேரருள் வழங்கி பெருமைகள் சேர்த்திடுவாய்!
அனைவருக்கும் இனிய துன்முகி ஆண்டு சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!