செவ்வாய், 19 ஜூன், 2018

கரையாத துயருமுண்டோ?

                                      
 கரையாத துயருமுண்டோ?


ஊதிப்பெரிதாக்கி
உருவான நீர்க்குமிழி
காற்றில் கரைகிறதே
கணநேரத்தில்!

உடையாத மனமிருந்தால்
கடுந்துயரும் கரைந்திடுமே
கால வெள்ளத்தில்!
-காரஞ்சன்(சேஷ்)

திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

செவ்வாய், 12 ஜூன், 2018

அகலட்டும் அல்லல்கள்!


                                           அகலட்டும் அல்லல்கள்!
கொளுத்தும் வெயிலுக்கு

வெளுத்த உடை!

தேர்காண வந்தோரின்

வேர்வை போக்கிட

விரிந்த கரங்களில்

விற்பதற்காய் விசிறிகள்!

அரங்கனின் பார்வைக்கு

அவர் விசிறி!

செய்யும் தொழிலதனை

தெய்வமாய் நினைப்பதால்

அரங்கனும் ஆவாரோ

அவரின் விசிறி?

கடைக்கண் பார்வைக்குக்

காத்திருக்கும் அவருக்கு

அரங்கன் அருளால்

அகலட்டும் அல்லல்கள்!

                       - காரஞ்சன்(சேஷ்),
            திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!