வியாழன், 14 ஏப்ரல், 2016

அறுபதில் பாதியாய் அமைந்த துன்முகியே!-காரஞ்சன்(சேஷ்)



நீர்வளம் பெருகி ஏர்நிலை உயர்ந்திட
உறுதுயர் களைய உள்ளங்கள் உருகிட
ஊர்கள் அனைத்தும் உயர்நிலை அடைந்திட
வருவாய் பெருகி வறுமை அகன்றிட
ஊறிடும் பாசத்தால் உறவுகள் பெருகிட
பேரொடு புகழும் பெருவாழ்வும் பெற்றிட
அறுபதில் பாதியாய் அமைந்த துன்முகியே
பேரருள் வழங்கி பெருமைகள் சேர்த்திடுவாய்!
அனைவருக்கும் இனிய துன்முகி ஆண்டு சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

10 கருத்துகள்:

  1. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பாடல் அருமை. பாராட்டுகள். நல்வாழ்த்துகள். அன்பான ஆசிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது!நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!

      நீக்கு
  2. அருமை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது!நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே!

      நீக்கு
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது!நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!

      நீக்கு
  4. அறுபதில் பாதியாய் அமைந்த புத்தாண்டை வரவேற்ற விதம் அருமை! எனது ஆசிகள் அனைவருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது!நன்றி!

      நீக்கு
  5. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது!நன்றி ஐயா!


    நீக்கு

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு