ஞாயிறு, 28 அக்டோபர், 2012
வெள்ளி, 26 அக்டோபர், 2012
வியாழன், 25 அக்டோபர், 2012
சுட்ட ரொட்டி!-காரஞ்சன்(சேஷ்)
சுட்ட ரொட்டி!
அழகு மலரொன்று
அடுப்பருகில் அமர்ந்ததென்ன?
வாடாமலர் இங்கு
வாட்டிடுதே ரொட்டிதனை!
சொப்பு விளையாட்டில்
ஒப்புக்குச் சமையலுண்டு!
உண்மைச் சமையல்தான்
உந்தன் விளையாட்டோ?
எதிர்பாரா
அதிர்வலைகள்
ஏன்
உந்தன் கண்களிலே?
எரிவாயு
விலையேற்றம்
இதற்குள்
அறிந்தாயோ?
எதிர்காலந்தனை
ஏற்று
எதிர்கொள்ளத்
துணிந்தாயோ?
-காரஞ்சன்(சேஷ்)பட உதவி: இணையம்
புதன், 24 அக்டோபர், 2012
படைப்பு!- காரஞ்சன்(சேஷ்)
படைப்பு!
படைத்தவனோ….
கொடியிடைதாளா
வடிவு தந்தெம்மை
உருளவிட்டான்
தரையினிலே!
படைப்பவனோ …
பூசை முடிவினிலே
ஓசைவர ஓங்கிஎமை
உடைக்கின்றான்
சாலையிலே!
உருளுகின்றார்
பலர்தரையில்!
உருளுகிறது எம்தலைதான்
உருள்பவரின் மத்தியிலும்!
உடைபடவா பிறந்தோம்?
உரிய இடமளித்தால்
இடருண்டோ எம்மாலே?
இக்கணமே சிந்திப்பீர்!
-காரஞ்சன்(சேஷ்)பட உதவி: கூகிளுக்கு நன்றி!
திங்கள், 22 அக்டோபர், 2012
வாய்திறவாய்! -காரஞ்சன்(சேஷ்)
வாய் திறவாய்!
மரப்பொந்தே மாளிகையோ?
வாயிலில் காத்திருக்கும்
வாய்திறந்து சேய்ப்பறவை!
சேயின் பசித்துயரை
தாயன்றி யாரறிவார்?
இரையெடுத்துப் பறந்து
விரைகின்றாய் பசிபோக்க!
ஊட்டிடும் காட்சி- தாய்
உள்ளத்தின் சாட்சி!
கொண்டை அழகியே!-நீ
கொத்திச் செல்கிறாய்
மரத்தோடு மனத்தையும்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






