ஞாயிறு, 29 ஜனவரி, 2012

பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்!!!

நண்பர்களே! உலக சாதனை நிகழ்த்திய இப்பெண்ணைப் பற்றி என் நண்பர் தன் முக நூலில் தெரிவித்திருந்தார்! அதை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.நாமும் பாராட்டலாமே!

ฬђเรtlє ๒l๏ฬєг
 
பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்!!!

ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.

15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட பாராட்டு சான்றுடன் விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி. இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது. இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது.

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)
CCNA (Cisco Certified Network Associate),
CCNA Security(Cisco Certified Network Associate Security),
OCJP (Oracle Certified Java Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

பாராட்டுமடல்- காரஞ்சன்(சேஷ்)
வியக்கவைக்கும்
விசாலஅறிவு-விசாலினிக்கு!
 பதினோரே வயதில்
உலகச் சாதனையை
ஓசையின்றி நிகழ்த்தியுள்ளாய்!

பேசும் திறன் வளர
பெற்றவள் முயன்றாள்!
கற்றோர் உன்திறம் புகழ
கண்டுளம் குளிர்ந்தாள்!

தமிழ்மண் உன்னால்
தலைநிமிர்ந்து நிற்கிறது!
உயர்ந்த மதியோரை
உலகறிய நாளாகும்!
ஊக்கமுடனே
உன்முயற்சி
தொடரட்டும்!

ஈரெழு வய்தில்தான்
ஏற்றிடுமாம் கின்னஸ்!
சாதிக்க வயதில்லை
சான்றாய் நிற்பவள்-நீ!
சாதிக்கப் பிறந்தவளின்
சாதனைகள் வளரட்டும்!
பெற்றோர் நெஞ்சம்
பெருமகிழ்வு அடையட்டும்!
ஈடில்லாப் புகழோடு
நீடுவாழ வாழ்த்தும்
                                              -காரஞ்சன்(சேஷ்)

4 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு நண்பரே... விசாலினி போன்ற பெண்களுக்கு இன்னும் நிறைய உதவியும் ஊக்கமும் கிடைக்கவேண்டும்....

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. விசாலினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள்! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு சார். விசாலினிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு