ஞாயிறு, 18 மார்ச், 2012

மனித நேயம்- கவிதை ஆக்கம் என் மகள் பவித்ரா


மனித நேயம்!

அறிவியலில் வளர்ந்தோம்!
ஆற்றலிலே சிறந்தோம்!

ஆனால்...

நாளொரு குற்றம்!
பொழுதொரு கொலை!

தினசரி நாளிதழில்
தினமொரு செய்தி!

உலகிற்கே உணவுதரும்
உழவனுக்குப் பசிக்கொடுமை !

பசியுடன் அழும்
பச்சைக் குழந்தைகள்
குப்பைத் தொட்டிகளில்!
தொட்டில்களா தொட்டிகள்?

வளர்த்த பெற்றோர்கள்
வாடிடலாமோ?
முதியோர் இல்லங்களை
நாடிடலாமோ?

பணத்திற்காய்
மனதையும் விற்கும்
மனிதர்கள் இன்று!

வன்முறை என்பது
இவையும் தானே?

வேரறுப்போம்
இவ்வன்முறையை!
வீறுகொள்வோம்
மனிதநேயம் மாண்புறவே!

                                                         -சே.பவித்ரா

பட உதவி: கூகுள்

20 கருத்துகள்:

  1. //வளர்த்த பெற்றோர்கள்
    வாடிடலாமோ?
    முதியோர் இல்லங்களை
    நாடிடலாமோ?//

    சிறு வயதிலேயே நல்லதோர் சிந்தனை.... நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி பவித்ரா....

    பதிலளிநீக்கு
  2. தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. "பணத்திற்காய்
    மனதையும் விற்கும்
    மனிதர்கள் இன்று!"

    அருமையான கவிதை சார் ! பவித்ரா-க்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா!
      -பவித்ரா

      நீக்கு
  4. தங்கள் மகள் பவித்ராவுக்குப் பாராட்டுக்கள்.

    அழகான விழிப்புணர்வு ஊட்டும் சிந்தனைகளைத் தந்துள்ள கவிதை.

    //உலகிற்கே உணவுதரும்
    உழவனுக்குப் பசிக்கொடுமை !//

    சபாஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ஐயா!
      -பவித்ரா

      நீக்கு
  5. உலகிற்கே உணவுதரும்
    உழவனுக்குப் பசிக்கொடுமை !

    பசியுடன் அழும்
    பச்சைக் குழந்தைகள்
    குப்பைத் தொட்டிகளில்!
    தொட்டில்களா தொட்டிகள்?//
    அவலத்தை அரங்கேற்றிய வரிகள் விடை கிடைக்குமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!-பவித்ரா

      நீக்கு
  6. சிந்தனை மிகச்சிறப்பு.. மேலும் தொடர்ந்திட ஊக்கம் தாருங்கள் சார் என்னோட வாழ்த்துக்களையும் அவர்களிடம் சேர்த்து விடுங்க .. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி சார்!

      என் மகளும் தாங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறாள்
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  7. //வேரறுப்போம்
    இவ்வன்முறையை!
    வீறுகொள்வோம்
    மனிதநேயம் மாண்புறவே!//

    எழுச்சிமிக்க வரிகள் பவித்ரா. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
      -பவித்ரா

      நீக்கு
  8. மனித நேயச் சிந்தனையும் ஆக்கமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
      -பவித்ரா

      நீக்கு
  9. இவையும் வன்முறைதானே ...
    ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன் ஒரு பாலசந்தர் படத்தில்
    திருமணத்திற்க்காக மதம் மாறச் சொல்வதும் வரதட்சனையே ...
    என்று ஒரு வசனம் . . .
    அதையொட்டிய .. கருத்து ..
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
      -பவித்ரா

      நீக்கு