விண்ணளக்கப் பாதையிட்டு
கண்களுக்குள் கனவைத்தொட்டு
வண்ணங்கள் குழைத்து வாழ்வில் ஒளியூட்ட
பூமிக்குள் பிறந்த நிலவும் நீ!
என்பாதைகளில் பூக்கள்பரப்பி
என்மனமுழுதும் நம்பிக்கைநிரப்பி
நீங்காது நெஞ்சில் நிற்கிறாய்
என் ஆசானாய் நிலவும் நீ!
வாழ்விற்கு வித்திட்ட விதையும் நீ!
விதைமேல் தூவும் மழையும் நீ!
மழையால் வளரும் மரமும் நீ!
வாழ்விலும் தாழ்விலும்
தாங்கிநிற்கும் தாயும் நீ!
தாயினும் மேலாகி தன்னைக்
கொடுத்துத் துணைசெயும் தெய்வம் நீ!
தெய்வங்களுள் உயர்ந்து
நிற்கும் என் ஆசான் நீ!
சே.பவித்ரா.
ஆங்கிலக் கவிதை
when I lay weak and lame
You lifted me and called my name
Into mylife a Rainbow came
And gave me all the light and fame!
Whatever I do you never blame
And in my heart, you lit a flame
You made me win all my games
And without you I'd never be the same
My dear teacher calm and kind
A person like you is hard to find
And all I want is to wish you and say
"A VERY HAPPY TEACHERS DAY"
-S.PAVITHRA





