புதன், 15 பிப்ரவரி, 2012

நன்றி! நன்றி! நன்றி!- காரஞ்சன் (சேஷ்)

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களின் அன்பின் அடையாளமாக என்னுடைய வலைப்பூவிற்கு அன்பின் விருது என்ற விருதினை வழங்கியுள்ளார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி!

பார்வை: http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html
ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னூட்டம் அளித்து, என்னை எழுதத் தூண்டியவர். அவருக்கு இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி! உங்களைப் போன்ற மூத்த, அனுபவமிக்க, படைப்பாற்றல் பெற்றவர்களின் அறிவுரைகளும், ஆசிகளும் புதிய பதிவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை!


எனக்குப் பிடித்த 7 விஷயங்கள்:

1. பிடித்த புத்தகங்களைப் படிப்பது.

2.என்னுடைய கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம் ஆற்றுமணலில் 
   இயற்கையை இரசித்தபடி நடப்பது

3.மகளின் கவிதைகள் மற்றும் பாடல்களை இரசிப்பது.

4. நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது.

5. சைக்கிளில் அதிகாலை (அ) அந்திமாலையில் நெரிசலற்ற சாலையில் பயணிப்பது.

6.நண்பர்களுடன் படித்த, பார்த்த, இரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது

7. பாடல்களை சேகரிப்பது- முன்பு நிறைய ஒலிநாடாக்கள்- தற்போது கணினியிலேயே ஒரு வன்தட்டு முழுவதும்.

எனக்களித்த இந்த விருதினை கீழ்க்கண்ட பதிவர்களுக்கு அளித்து மகிழ விரும்புகிறேன்.

1.கவிஞர் கணக்காயன் அவர்கள்:

   http://kanakkayan.blogspot.in/

2. திரு ரவி m
  
http://atchaya48.blogspot.com/

3. enpaarvaiyil
http://ennaparavaigal.blogspot.in/

விருது பெற்றவர்களுக்கு என் நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)

10 கருத்துகள்:

  1. விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    எனக்கு THE VERSATILE BLOGGER AWARD என்ற விருதினை மீண்டும் தங்கள் மூலம் அளித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    [இதே விருது ஏற்கனவே திருமதி உஷா ஸ்ரீகுமார் என்பவரால் 04.02.2012 அன்று எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

    Please refer my earlier post Link: http://gopu1949.blogspot.in/2012/02/versatile-blogger-award.html இது தங்கள் தகவலுக்காக மட்டுமே]

    தங்கள் மூலம் இன்று விருதுகள் பெற்றுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  2. விருது பெற்ற தங்களுக்கும், தங்கள் மூலம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அன்பிற்குரியத் தோழர் அவர்களுக்கு, எமது அட்சயா வலைத்தளத்திற்கு இவ்விருது வழங்கி கவுரவித்தமைக்கு நன்றி. எமது படைப்புகளுக்கு பின்னூட்டங்கள் இல்லை. ஆனாலும் தெரிவு செய்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. கிருஷ்ணாலயா மற்றும் அட்சயா வலைத்தளம் வருகைதந்து பின்னூட்டம் இடுங்கள் தோழரே!
    http://atchaya-krishnalaya.blogspot.com
    http://atchaya48.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. நண்பரே .விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
    தங்களிடமிருந்து இன்னும் கவிதை
    மழை கொட்டோ கொட்டென்று கொட்டட்டும்
    தமிழ் நெஞ்சங்கள் ரசித்து மகிழ

    பதிலளிநீக்கு
  6. பாராட்டுக்கள்
    பாராட்டுக்கள்.

    கருத்துகளும், கவிதைகளும் தொடரட்டும்.

    பரிசு ஒரு ஊக்குவிப்பாக இருந்து நல்ல படைப்புகளுக்கு வழி வகுக்கட்டும்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு