சனி, 15 செப்டம்பர், 2012

இமைகள்! - காரஞ்சன்(சேஷ்)

 இமைகளே!
விழிகளின் மொழிகள்
வெளிவரும் வழிகளே!
 
கடைக்கண் பார்வைக்கு
காத்திருக்கும் தருணத்தில்
ஏனோமூடிக் கொள்(ல்)கின்றாய்?
 
பிரிவெனும் துயருடன்
இரவுகள் கழிகையில்
ஏனோ மூடமறுக்கின்றாய்!
 
கண்களின் காதலியே!
உன்வழி ஒருத்தி
உட்புகும் முயற்சிக்கு
ஒத்துழையாமை இயக்கமோ?
                                                      -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

21 கருத்துகள்:

  1. ஒத்துழையாமை இயக்கம் அருமையாக நடந்ததா ?

    பதிலளிநீக்கு
  2. //பிரிவெனும் துயருடன்
    இரவுகள் கழிகையில்
    ஏனோ மூடமறுக்கின்றாய்!//

    அருமை.... பிரிதலின் வலியில் தூக்கம் வருவதில்லையே....

    பதிலளிநீக்கு
  3. விழிகளின் மொழிகள் வெளிவரும் வழிகள்! சிறப்பான வரிகள்! அருமையான கவிதை!

    இன்று என் தளத்தில்
    பிள்ளையார் திருத்தினார்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
    வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html



    பதிலளிநீக்கு
  4. //கடைக்கண் பார்வைக்கு
    காத்திருக்கும் தருணத்தில்
    ஏனோமூடிக் கொள்(ல்)கின்றாய்?//

    :) :) :)

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான அருமையான
    ரசிக்கும்படையான அழகான சிந்தனை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. கண்களின் காதலி, அருமையான விளிப்பு. கண்ணைக் காக்கும் இமைகளைக் கருத்திற்கொண்டு பாடிய கவிதை அழகு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. காதல் என்றாலே பொறாமையும் தவிர்க்க முடியாது...!இமைகள் மட்டும் என்ன விதிவிலக்கா...?நல்ல கற்பனை...!

    பதிலளிநீக்கு


  8. Gopalakrishnan Vai. said

    கண் இமைக்காமல் படித்தேன். நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. விழிகளின் மொழிகள்
    வெளிவரும் வழிகளே!

    இமைக்கும் அழகிய கண்கள் படமும் கருத்தும் அருமை !

    பதிலளிநீக்கு