ஞாயிறு, 25 நவம்பர், 2012

இனிக்கட்டும் எம்வாழ்வும்!


 
வளைந்த கரும்புகளே நீர்
வாயிற் காவலரோ?
வாய்க்கால்வழி நீர்ப்பாய்ச்ச
வழிவிடு செங்கரும்பே!

 
இனிப்பொடு கசப்பும் -உன்னில்
இருப்பதாய்ப் பாடலுண்டு!
உறிஞ்சிநீ நீர்குடித்தால்
உண்டாகும் நற்சாறும்!


விளைந்தபின் உனக்குரிய
விலையும் கிடைத்தால்தான்
இனிக்கும்  உன்னாலே
இனித்திடும் எம்வாழ்வும்!

                        -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

17 கருத்துகள்:

  1. // விளைந்தபின் உனக்குரிய
    விலையும் கிடைத்தால்தான்
    இனிக்கும் உன்னாலே
    இனித்திடும் எம்வாழ்வும்!//

    சரியாச் சொன்னீங்க!

    சிறப்பான படமும் கவிதையும்.

    பதிலளிநீக்கு
  2. உடனடி வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. அருமையான சிந்தனை வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. படமும் அதற்கேற்ற கவியும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. கவிதை கரும்பை விட இனிப்பாக இருந்தது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. //விளைந்தபின் உனக்குரிய
    விலையும் கிடைத்தால்தான்
    இனிக்கும் உன்னாலே
    இனித்திடும் எம்வாழ்வும்!//

    இது தான் உண்மை நிலை. அழகாச் சொன்னீங்க...

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. இனிக்கும் கரும்பிற்கு ஏற்ற விலை கிடைக்காது போனால் கசக்கத்தானே செய்யும். நல்ல வரிகள். ;)

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு

  10. கரும்பை விளைவித்தவனுக்கு
    உரிய விலையில்லை
    அதை கசக்கி பிழிந்து
    சாறேடுப்பவனுக்கும் உரிய விலையில்லை
    ஆனால் சாரை சக்கரையாக்கி விற்பவனுக்கோ
    கொள்ளை லாபம்.
    உழைப்பவர் கடனில் தத்தளிக்கிறான்
    அவன் உழைப்பை சுரண்டும் பலர்
    உல்லாசத்தில் திளைக்கிறார்கள்
    இதுதான் இன்றைய நிலை
    யதார்த்தத்தை
    வெளிப்படுத்தும் வரிகள்.
    அருமை

    பதிலளிநீக்கு