வியாழன், 8 டிசம்பர், 2011

குழந்தை-- கவிதை ஆக்கம் காரஞ்சன் (சேஷ்)

பயிராகும் நாற்றைப் போல்
பிறைநிலவு கீற்றைப்போல்
தரை மீது தவழ்கின்ற
உயிர் பெற்ற ஓவியமே!

வாழ்க்கைப் பயணத்தில்
வழியறியா மானிடர்போல்
ஈரப் படுக்கையிலே
ஏன் நீ உழலுகிறாய்?

அழுக்கைச் சுமந்தமுகம்
அழுக்கற்ற வெள்ளை மனம்!
மழலைப் பேச்சிருக்க
மற்றதெல்லாம் எனக்கெதற்கு?

நித்தம் கவலையொன்று
நிம்மதியைக் கெடுக்கையிலே
மழலைச் சிரிப்பினிலே
மனதைப் பறிகொடுத்தோம்!

                                                சேஷாத்ரி

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

6 கருத்துகள்:

  1. உவமைப் பொழிவாய், உருவகச் செறிவாய்,
    உவப்பின் நிறைவாய், உள்ளக் களிப்பாய்,
    தவழ்ந்தும், தத்தியும், தளிர்நடை கூட்டும்,
    நுவலருங் "குழந்தை" உணர்த்திடும் பாடலே!

    இ.சே, இராமன்(கவிஞர் கணக்காயன்)

    பதிலளிநீக்கு
  2. //நித்தம் கவலையொன்று
    நிம்மதியைக் கெடுக்கையிலே
    மழலைச் சிரிப்பினிலே
    மனதைப் பறிகொடுத்தோம்!//

    ஊக்கம் தந்திடும் வரிகள்....

    பதிலளிநீக்கு
  3. அன்பின் சேஷாத்ரி - கவிதை அருமை - மழலையின் குணநலன் பற்றியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை

    சரண்யா

    பதிலளிநீக்கு
  5. நன்று.. நன்று..
    இயல்பாய் வருகின்றன எண்ணங்கள்....
    கோர்வையாய் வருகின்றன வார்த்தைகள்...
    தொடரட்டும்....

    --முத்துக்குமார்

    பதிலளிநீக்கு
  6. இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்
    ......................................................
    வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,
    தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது. 
    - இணையுரு (WebFont)  என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
    - இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு  ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?
    - இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?
    - அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?
    என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.  
    தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...
    சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
    இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html 
    இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை 
    1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891
    2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053

    (அல்லது)
    1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html 
    2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html  

    மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.

    நன்றி மற்றும் வணக்கம்
    ராஜு.சரவணன்  

    படித்தவுடன் இதை நீக்கிவிடவும் 

    பதிலளிநீக்கு