திங்கள், 30 ஏப்ரல், 2012

உயிரில் உயிரே! - காரஞசன்(சேஷ்)

ன்பே   அருகமர்ந்து
றுதல்மொழி கூற ஆறாத் துயருண்டோ?
னியவளே! இல்வாழ்வில்
டிலா மகிழ்வளிக்கும்
ற்றதுணை உன்னுடனே
டலன்றிப் பிணக்கேது?
த்தகைய துயர்வரினும்
ற்று அதைவெல்வோம்!
யமில்லை! அச்சமில்லை!
ன்றிய சிந்தையால்
ங்கு புகழ்எய்திடுவோம்!
ஒளவியம் அற்ற உன்மொழி ஒளடதமோ
கென எனைமாற்றி ஏற்றம் தந்திடுமே!

                                                                                              -காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 26 ஏப்ரல், 2012

நாளை நமதே!- காரஞ்சன்(சேஷ்)


             தழைத்திருந்த வேளையிலே
   கிளைக் கரங்கொண்டு 
வெயிலை நிழலாய்  
  வீழ்த்தி    நின்றிருந்தோம்!

       வாட்டிய "தானே" எம்மை
      கோட்டோவிய மாக்கியது!

நம்பிக்கை வேர்களால்
பூமியைப் இறுகப்பற்றி
   வாழ வரம் கேட்கிறோம்!

            கொஞ்சி மகிழ்ந்த பறவைகளே
   அஞ்சியதோ அருகில் வர?

மாலைக் கதிரவனோ
       மாறிடும் இந்நிலையென 
வண்ண முகம் காட்டி
      வானில் மறைகின்றான்!



                                                  நாட்கள் உருண்டோட
                                                  நாங்கள் துளிர்த்தெழுந்தோம்!

                                                        பாடும் பறவையினம் மீண்டும்
                                                        கூடி மகிழுதிங்கே

                                                        வாடும் மனிதர்களே!
                                                        பாடம் ஒன்றுரைப்பேன்!
                                                        காலம் மருந்தாகி
                                                        கடுந்துயர் கரைத்திடுமே!

                                                        நம்பிக்கை துணையானால்
                                                         நாளை நமதன்றோ!

                                                                                      -காரஞ்சன்(சேஷ்)
(தானே புயலின் தாக்குதலுக்கு உள்ளான மரம்-தற்போது மீண்ட நிலையில்
நான் எடுத்த படங்கள்)

வியாழன், 12 ஏப்ரல், 2012

வேர்களை மறவா விழுதுகள்- காரஞ்சன்(சேஷ்)

நண்பர்களே!

 கூட்டுக் குடும்பங்கள் இருந்த நிலை மாறி
முதியோர் இல்லங்களை நாடி
முதுமைப் பருவத்தில் வாடும் பலர்
செல்லும் நிலை உள்ளது.

குடும்பப் பைகளின்
உறவு நூல் அறுந்து
உதிர்ந்த நன்மணிகளாய்ச் சிலர்.


தோட்டத்துச் செடிகளாய் இருந்தவர்கள்
தொட்டிச் செடிகளாய்!

இந் நிலையில் வேர்களை மறவா விழுதுகளாய் நாம் இருக்க வேண்டுகோளாய் இப்பாடல்!

(இளமை கொலுவிருக்கும்  ... பாடல் மெட்டில்)..

உடலில் வலுவிருக்கும் உளத்தில் தெளிவிருக்கும்
எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை
இல்லாமல் பயனில்லை பருவத்திலே!

உடலில் வலுவிருக்கும், உளத்தில் தெளிவிருக்கும்,
எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை
இல்லாமல் பயனில்லை பருவத்திலே

உயிரைச் சுமந்தவளும் தாயல்லவோ?
ஊட்டி வளர்த்தவளும் அவளல்லவோ?
பெற்று வளர்ப்பவர்கள் கண்ணல்லவோ?
பேணிக்காப்பது நம் கடனல்லவோ?
பொறுப்பைச் சுமந்து நமை போற்றி தினம் வளர்த்து
ஏற்றம் அளித்தவர்கள் இவரல்லவோ?-பெற்றோர்
போற்றி வணங்க வந்த உறவல்லவோ?

இயற்கை தந்த வரம் மூப்பல்லவா?  இது
நமக்கும் நாளை வரும் நிலையல்லவா?
குழந்தை  மனதைக் கொள்ளும் முதிய்வர்க்கே- நாம்
விழைந்து சேவை செய்ய ஒரு வாய்ப்பல்லவா?
இளமை ஓடி விடும் முதுமை கூடிவிடும்
பிணிகள் நாடிவரும் வேளையிலே அவர்
வாட்டம் போக்குவது பெரும் சுகமல்லவோ? நாம்
வேர்களை மறவா விழுதல்லவோ?

                                                                        -காரஞ்சன்(சேஷ்)

திங்கள், 2 ஏப்ரல், 2012

மலருக்குத் தென்றல் பகையானால்?-காரஞ்சன்(சேஷ்)

மக்காக் குப்பை மிகுமானால்-மண்ணில்
மழைநீர் இறங்க வழி ஏது?

வெளிவரும் புகையே பகையானால்
வளியில் ஓசோன் நிலையாது!

பயிருக்கு மருந்தே பகையானால் -நல்
உயிரினம் வாழ்ந்திட வழி ஏது?

உடலுக்கு உணவே பகையானால்
உயிர் வாழ்ந்திடவே வழி ஏது?

அண்டை நாடுகள் பகையானால்
சண்டை நின்றிட வழி ஏது?

உறவும் நட்பும் பகையானால்
உள்ள அமைதிக்கு வழி ஏது?

இயற்கை வளங்களைக் காத்திட்டால்

இனிக்கும் வாழ்வு புவி மீது!

வெறுப்பெனும் உணர்வை விலக்கிவிட்டால்
செருபகை தருதுயர் இனி ஏது?

 -காரஞ்சன்(சேஷ்)