ஞாயிறு, 7 அக்டோபர், 2012

பாசமழை! -காரஞ்சன்(சேஷ்)

 
 
    விளைகின்ற நற்பயிரை 
    வெள்ளம் கொள்ளுமென
                 தோளில் சுமக்கின்ற -தாயுள்ளம்
       அன்பு வெள்ளத்தில்-அவன்
      நனைவதை அறியாதோ?
 
 

  ஊட்டி வளர்த்த உயிர்
       உறுதியாய் உள்ளவரை
   வாட்டிடும் முதுமை   
    வந்தென் செய்யுமென
    சுகமான சுமையாக   
                       சுமக்கின்றான்- சுமந்தவளை!

                                                                                                               -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு நன்றி:
திரு. வெங்கட் நாகராஜ் அவர்களே!
                                            
 

35 கருத்துகள்:

  1. சுகம் சுமையாவதும்
    சுமை சுகமாவதும்
    மனதில் தோன்றும்
    எண்ணங்களை
    பொறுத்தே அமையும்
    படமும்
    கருத்தும் அருமை
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. படங்களும் அதற்கான கவிதைகளும்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ஐயா! இன்றைய பதிவில் கற்காலம் கவிதையும் இடம்பெற்றுள்ளது! தங்களின் கருத்தினை அறிய விழைகிறேன்!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  3. தங்களின் கருத்துரை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  4. வாவ்.... இதற்குத்தான் ஒரு கவிஞர் வேண்டுமென்பது.... நான் ஏதோ படத்தினைப் போட்டு சும்மா இரண்டு வரி எழுத, அதே படத்திற்கு கவிதை எழுதி விட்டீர்களே.... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தங்களின் உபயம் நண்பரே!
      கற்காலத்தையும் படித்து தங்களின் கருத்தினை பகிர வேண்டுகிறேன்.

      நீக்கு
  5. தங்கள் வருகைக்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  6. படங்களும் அதற்கேற்ற வரிகளும் மிகவும் அருமை...

    இதற்கு முன் கருத்திட்டேன் ஐயா... ஏன் வரவில்லை என்று தெரியவில்லை... (மறுபடியும் இந்தப் பகிர்வு எனது dashboard-ல் வந்தது...)

    நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. இன்னக்கிதான் உங்க பக்கம் வரேன்னு நினைக்கிரேன் நல்லா இருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "மீட்டிட வருவானோ?" எனுக் கவிதைக்கு தாங்கள் முதன் முதலாக வந்து கருத்துரையிட்டீர்கள்! தங்களின் வரவும் வாழ்த்துக்களும் தொடர வேண்டும் என்பது என் ஆவல்! வருகைக்கு நன்றி!

      நீக்கு
  8. படங்களுக்கு ஏற்ற வரிகள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகை மகிழ்வளித்தது! தங்கள் வலைப்பக்கத்தில் வெளியான
    நாற்றங்கால் படத்தை ஒரு கவிதைக்கு பயன்படுத்த உள்ளேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. இரண்டும் நெகிழ்வான படைப்புகள் கூடவே அந்த படங்களும் .. வாழ்த்துக்கள் தோழமையே .. தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  11. மிகவும் அருமை அனைத்தும் சுகமான சுமைகள் நன்றி சகோ என்கபக்கமும் வந்து பாருங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! நிச்சயம் தங்கள் வலைப்பக்கம் வருகிறேன்! நன்றி!

      நீக்கு
  12. இரண்டுமே சுகமான சுமைகள்தான்....!நன்று...நன்றி...வாழ்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  13. what a lovely words may god bless you more ans more

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
  14. படங்களும் அதற்கான விளக்கங்களும் மிக மிக அருமை....

    நன்றி,
    மலர்
    http//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  15. தங்களின் வருகைக்கு நன்றி! அட்டவணை உருவாக்க குறிப்புகள் கொடுத்தால் பயனுள்ளதாக அமையும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  16. பாசமழை, கற்காலம கவிதைகள் அருமை. வடிவமும் ரசிக்கும் படி இருக்கிறது. நன்று.

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வருகை மகிழ்வளித்தது நண்பரே!

    பதிலளிநீக்கு
  18. அன்பு வெள்ளம் சுகமான சுமை -
    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  19. தங்களின் வரவு மகிழ்வளித்தது! நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  20. அன்பினைப்பற்றி அன்புடன் கூறியுள்ள கவிதையும் படங்களும் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  21. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு