மழைக்கால இரவுகளில்...
ஓட்டு வீட்டிற்குள்
ஒற்றுமையாய் நாமிருக்க
வறுமை நம்முடனே
வசதியாய் வாழ்ந்தது!
ஓட்டைகள் வழியாக
உள்ளிறங்கும் மழைநீரோ
பாடும் பாத்திரமாய்
பாத்திரத்தை மாற்றிவைக்கும்!
கோணிகளை விரித்து
குளிராமல் படுத்திருந்தோம்!
நம்பிக்கைக் கீற்றெனவே
நாம் மி (இ)ன்னல் இரசித்திருந்தோம்!
ஓட்டுவீடு ஒட்டியவீடாயிற்று!
பெய்யும்மழை இரசிக்க
ஓட்டுவீட்டில் இருந்த
ஒட்டுதல் ஏனில்லை?
கண்ணீர் வழிந்து
காதோரம் நனைத்திருக்க
பாத்திரங்களை இரசிக்கும்
பாத்திரம் ஆனேன்நான்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
