குற்றமென்ன? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றமென்ன? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜனவரி, 2013

குற்றமென்ன?-காரஞ்சன்(சேஷ்)

 
 
குற்றமென்ன? 
 
 
வளர்த்த மரமோ? வளர்ந்த மரமோ?
வளர்த்தவரோ?  வளர்ந்தவரே!
 
மழைவேண்டி மரபலியா?
பிழைசெய்யும் பெரியவரே!
 
மரமிழைத்த குற்றமென்ன?
மரத்தின் மீதேறி
சிரச்சேதம் செய்கின்றீர்?
 
முள்ளெடுக்க முள்ளெடுப்பார்!
இங்கோர் மரத்துண்டே
வெட்டும் கத்திக்கும்
விளங்கிடுதே கைப்பிடியாய்!
 
விலக்கிடுவோம் இச்செயலை!
விளங்கிடுவோம் சிறப்புடனே!
 
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி : கூகிளுக்கு நன்றி!