என்றும் பசுமையாய்!
வளரும் பருவத்தில்
வளர்த்தாய் எங்களை!
வாங்கிய கடனை
வட்டி வளர்த்தது!
கரும்பும் நெல்லும்
கருகும் நிலையில்
ஆழ்துளைக் கிணறுகள்
அமைத்திட முயன்றோம்
நீராய்க் கரைந்தது பணம்
நீர் கிடைக்காமலே!
கடனை அடைக்க
கைமாறியது நிலம்!
கண்ணீர் பெரு(க்)கும் நினைவுகளில்
என்றும் பசுமையாய் என்னுள் நீ !
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
