படக்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படக்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2014

படக்கவிதைகள்!- காரஞ்சன்(சேஷ்)

 
புன்னகைதேசத்துப்
பூக்களோ இவர்கள்!
 
அரும்புகளின் புன்னகையில்
ஆயிரம் மலரழகு!
 
சிந்திடும் புன்னகை
எந்நாளும் நிலைக்கட்டும்!
 
 
இசைந்து இசைத்தாயோ?
உனைச்சுற்றி ஓர் ஓளிவட்டம்!
உன் இசையில் மயங்கியதோ இளவட்டம்?


ஆற்றங்கரையோரம்
அமர்ந்தவளின் மனத்துள்ளே
நீரோட்டம்போல
நினைவலைகள் ஓடிடுதோ?
 
நாளையவர் வருவாரோ?
நங்கையவள் துயர்போக்க!
வேளை பிறந்திட்டால்
விலகாதோ துயரெல்லாம்!


சின்னவனின் குழலோசை
உன்னையும் மயக்கியதோ?
 
பஞ்சொடு பறக்கும்
பாராசூட் பயணமோ?
 

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!