பறவைப் பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பறவைப் பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 மார்ச், 2014

ஒற்றைப் பறவை! - காரஞ்சன் (சேஷ்)

 
ஒற்றைப் பறவை!

தனிமைநாடும் வேளைகளில்

சுற்றித் திரியும்

ஒற்றைப் பறவையிடம்

ஒட்டிக் கொள்கிறது மனம்!

 


வெளிச்சம் பரவிய விரிந்த வானில்

விருப்பம்போல் வட்டமிடும்

ஒற்றைப் பறவை!

வழி மாறியதோ?

 
 

மோனநிலையில்

முள்மரத்தின் மீது ஒரு பறவை!

வலி மிகுந்ததோ?

 


பட்டமரக் கொம்பில்

பரிவுடன் ஒரு பறவை!

வாழ்ந்த இடம்தேடி

வந்தமர்ந்ததோ?

 


கிளை மீதமர்ந்து -சோக

கீதம் பாடும் ஒரு பறவை!

துணை ஒன்றைத்தேடி

துயரம் கொண்டதோ?

 


இவற்றை மறந்து

பறக்கத் துணிந்தால்..

எந்தப் பறவைக்கும்

இரையுண்டு உலகினிலே!

 


பாடம் தந்திடும்

பறவைப் பார்வை!

                                                       -காரஞ்சன்(சேஷ்)


படங்கள்: கூகிளுக்கு நன்றி!