புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

இருளும் ஒளியும்-காரஞ்சன்(சேஷ்)


இருள்  விலக்கும் ஆண்டாய் இருந்திடு புத்தாண்டே!

ஒருபுறம் ஒளியும்
மறுபுறம் இருளுமாய்
உலகம் இருப்பதை
உரைக்குதோ உன்முகம்!
ஒளிவெள்ளம் பெருகிவர
ஒளியாத இருளுண்டோ?

எத்தகைய தடைவரினும்
ஏற்றுநீ எதிர்கொள்வாய்!
 எண்ணையும் திரியும்
இணைந்தெரிந்து இருள்நீக்க
காலத்தே ஏற்றிடு நீ
கல்வியெனும் நல்விளக்கை!

  
உன்போல் அறிவொளிகள்
உலகெங்கும் உதித்திட்டால்
கல்லாமை இருளெங்கும்
சொல்லாமல் அகலாதோ?
-காரஞ்சன்(சேஷ்)    

பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை! 

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வருக புத்தாண்டே! வருக! வருக! -காரஞ்சன் (சேஷ்)


அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


வருக புத்தாண்டே! வருக! வருக!
 
ஈராறுடன்  இன்னும் ஒன்றிணைந்திட

வருக புத்தாண்டே! வருக! வருக!

மைதி நல்கிடும் ஆண்டென வருக!

ற்றொணாத் துயர்களை அகற்றிட வருக!

ன்சொல் எங்கும் எதிரொலித்திடுக!
 

கைக்குணம் எங்கும் நிறைந்திட

ழவும் தொழிலும் உலகினில் ஓங்கிட

ற்றாய் எங்கும் உவகை பொங்கிட

ங்கும் மங்கலம் என்றும் தங்கிட

ற்றம் அளிக்கும் ஆண்டென வருக!
 

யம் போக்கி அறங்கள் தழைத்திட

ற்றுமை உணர்வு உலகெலாம் உதித்திட

ரணி நின்று வன்முறை ஒழித்திட

ஒளடதம் பெருகி உறுபிணி அகற்றிட

உறுதியும் திறனும் அருள்க புத்தாண்டே!

                                                            - காரஞ்சன் (சேஷ்)