காந்தி!
தேசத் தந்தையே!
வாராக் கடனிற்கும்
வைக்கின்றார் உன் பெயரை!
வைக்கின்றார் உன் பெயரை!
சிரித்த உன்முகம்தான்
செலவழியும் பணத்திலெல்லாம்!
அதனால்..
பாவ புண்ணியங்களில்
பங்குண்டு உந்தனுக்கும்!
நீட்டிய கரங்களிலே
நின்முகம் தவழ்ந்தால்தான்
கடமை ஆற்றுவதில் சிலர்
காட்டுகிறார் வேகத்தை!
எண்ணும் வேளையிலே-உமை
எண்ணி அவர் பார்த்திட்டால்
இந்நிலை மாறிடலாம்!
இவையொரு புறமிருக்க....
இன்று நான் கண்ட காட்சி!
குடிசை வாசலொன்றில்
சிரித்த உன் படம்வைத்து
நறுமண மலர்தூவி
சிறுவர்கள் வணங்கி நின்றார்!
நீ பிறந்த இந்நாளில்
நம்பிக்கை ஒளிவெள்ளம்
நாடெங்கும் பரவட்டும்!
-காரஞ்சன்(சேஷ்)
எண்ணும் வேளையிலே-உமை
எண்ணி அவர் பார்த்திட்டால்
இந்நிலை மாறிடலாம்!
இவையொரு புறமிருக்க....
இன்று நான் கண்ட காட்சி!
குடிசை வாசலொன்றில்
சிரித்த உன் படம்வைத்து
நறுமண மலர்தூவி
சிறுவர்கள் வணங்கி நின்றார்!
நீ பிறந்த இந்நாளில்
நம்பிக்கை ஒளிவெள்ளம்
நாடெங்கும் பரவட்டும்!
-காரஞ்சன்(சேஷ்)








