வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஜூன், 2014

ஒளிப்படக் கவிதைக்குப் பரிசு! -காரஞ்சன்(சேஷ்)

வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்!

"நம் உரத்த சிந்தனை" இதழுக்கு ஒளிப்படக் கவிதைப் போட்டிக்கு நான் எழுதி
 
அனுப்பிய கவிதை பரிசுக்குத் தெரிவாகி இம்மாத இதழில் வெளிவந்துள்ளது
 
என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,
 
அந்தக் கவிதையை  என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.
 
கவிதைக்கான இணைப்பு இதோ:
 
 
 
ஒரு வெண்பா எழுத ஆசைப்பட்டு  "உத்தம வாழ்வென்  றுணர்" எனும்
 
ஈற்றடிக்கு நான் எழுதிய வெண்பா.


நித்தமும் சோறுண்டு  நீட்டிக்  கதைபேசி

இத்தனை நாட்கள்  கழிந்தன -இத்தலத்தில்

எத்தனை பேர்க்கு பயன்தந்தோம் என்பதுவே

உத்தம வாழ்வென் றுணர்!

வெண்பா அறிந்தவர்கள் குறையிருப்பின் சுட்டுக. பிழையிருப்பின் பொருத்தருள்க.

நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)