சனி, 7 ஜூன், 2014

எட்டாக்க(ன்)னிகள்! சிறுகதை விமர்சனத்திற்கு என் மனைவிக்கு இரண்டாம் பரிசு!



மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "எட்டாக்க(ன்)னிகள்" சிறுகதையின் விமர்சனத்திற்கு  என் மனவிக்கு இரண்டாம்  பரிசு கிடைத்துள்ளது. 
 
VGK 19 - ’ எட்டாக்க(ன்)னிகள்  ’

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-19_23.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-19-02-03-second-prize-winner.html

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


என் மனைவியின் விமர்சனம்!


எட்டாக்க(ன்)னிகள் - விமர்சனம்


பாரதிராஜா அறிமுகப்படுத்தும் கிராமம் போன்று முதலிலேயே ‘எட்டாக்க(ன்)னிகள்’ கதை தொடங்குகிறது. சாதாரணமாகக் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கும்பல் இருக்காது. தற்போது தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் அவ்விடங்களில் பல பெருகி வருவதால் அதிக கும்பல் (குறிப்பாக இளம்பெண்கள்) ஒன்று வேலை நிமித்தமாகவோ (அ) கல்லூரிப் பிராஜெக்ட் (அ) டிரைனிங் எனப் பயணப்படுவது வாடிக்கையாகிவிட்டது. பெண்கள் என்றாலே மலர்கள்; மணமுடைய மலர்கள் பயணத்தில் வாசம் ஏற்படுத்தியதில் வியப்பில்லை.
 
கதாநாயகன் வாயிலாக கதாநாயகியைப் பற்றிய வர்ணனை, அந்த இளம் வயதுபெண்கள் கூட்டத்தில் ஒருத்தி மட்டும் ஒட்டடைக்குச்சி போல அசாதாரண உயரம். குதிரை முகம். மோட்டு நெற்றி. அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி வேறு. எலி வால் போன்று குட்டையாகக் கொஞ்சூண்டு தலைமுடி மட்டுமே. ஒரே நிதான உயரமுள்ள மற்ற பெண்களுடன் இவள் சேர்ந்திருப்பது, ஏதோ அழகிய வாத்துக்கூட்டங்களின் நடுவே, கொக்கு ஒன்று நிற்பது போலத்தோன்றியது எனக்கு. .


இத்தகைய வர்ணனையைப் படித்தவுடன் இயல்பாகவே படிப்பவரின் ஊகத்திற்கு கதாநாயகனின் உருவ அமைப்பை ஓடவிட்டு, ஆறடி உயரத்தில் அழகான அரவிந்த்சாமியைக் கண் முன் நிறுத்துகிறார்.
 
இதற்கு வலு சேர்க்கும் வகையில் கதாநாயகியை வர்ணித்ததுடன் இப்படியும் ஓர் அழகற்ற படைப்பா? என அனுதாபப்பட வைத்தது வேறு.
பின், ”அவள் வலிய வந்து உரையாடியதில் ஒரு வித இரசாயன மாற்றம் ஏற்பட்டு“ என முப்பத்து ஐந்து வயது என அனுமானிக்கமுடியாத ஐ.எஸ்.ஐ பிரும்மச்சாரி விவரிக்கையில் சற்றும் ஐயமே எழவில்லை அந்த உருவம் குறித்து.
 
மணிகேட்டு, காவிரி நதி நீர் பிரச்சினை பற்றி பேசி, என மிகவும் இயல்பாக நட்பு வளர்ந்து காதலாகி பரிணமிக்கும் வேளை அதைக் கதாநாயகன் கோடிட்டு காட்டியது பொங்கியெழும் இளமை உணர்ச்சிகளையும், ஓடிவரும் நதி நீரையும் ஒருவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது கட்டுக்கடங்காமல் வெள்ளமாய்ப் பாய்ந்து வரும். தாகமும் மோகமும் தீர அனுபவிப்பது அனைவரின் பிறப்புரிமையே” மிகவும் சிறப்பு.
 
அழகற்ற ஒருவருக்கு அனுதாபத்தினால் தான் வாழ்வளிக்க வந்ததாக எண்ணியதுடன் அவளும் அதை ஆமோதிப்பதாய் எண்ணி “ஒரு கை ஓசையை” எழுப்ப எண்ணியது இயல்பே. அவள் பஸ்ஸில் சில்லரை கொடுத்து உதவியதும் தன் காதலை ஆமோதிப்பதாய் உணரப்பட்டு கடிதம் எழுத வைத்தது என ஒவ்வொன்றிலும் மிகவும் படிப்படியாய் வெகு இயல்பாய் அமைத்த விதம் அழகு.
 
“அவள் வருவாளா?” என விழிமேல் வழி வைத்து பார்க்கையில் அவள் வராமல் போன போது வருந்தும் எண்ண ஓட்டங்கள் எல்லாமே இயற்கையாய் கதையோடு ஒன்றி விடுகிறது.

 
இயற்கையாகவே எண்ணங்களைக் கடிதம் வாயிலாக வெளிப்படுத்துவது என்பது சற்று எளிதாகத் தோன்றுவதால் முத்து முத்துக் கையெழுத்தில் எழுத எத்தனித்ததில் அவருடைய சிரத்தை தெரிகிறது. ஆனால் அந்தக் கடிதத்தைச் சேர்க்கமுடியாமல், மீண்டும் மீண்டும் தானே படித்து ஆனந்தப்படுவதும் பின் கசங்கியதால் வேறு பிரதி எடுத்து பத்திரமாய் கவரில் வைத்து எடுத்துச் செல்வதும் அழகிய நடையில் விரிகிறது.

 
அவளது வாத்துக் கூட்டத்தில் ஒரு வாத்து அவளுடைய கடிதத்தை அளித்தபோது அதைப் பத்திரப்படுத்தி, முத்தமிட்டு அவளது நிச்சயதார்த்த விழா அழைப்பைப் பார்த்து, அழகே இல்லாத அவளை அவளது அத்தைப் பையன் மணக்க இருப்பதாக அறிதல்
“உருவு கண்டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னா ருடைத்து”
என உணர்த்துகிறது.
நமக்குள் ”ஐயோ பாவம்” இவ்வளவு நல்ல மனதுடன் அழகற்ற அவளுக்கு வாழ்க்கை அளிக்க வந்தவர் முன்பே,
“Make hay while the sun shines”
(அ) 
அவள் நெகிழ்ந்ததாய் இவர் கருதிய தருணத்தில்
“Strike while the iron is hot”
என்று செயல்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

  ஒருவேளை கதாநாயகியின் முடிவே வேறாக இருந்திருக்கலாம்?
ஆனால் எல்லாவற்றிற்கும் மணிமகுடம் வைத்தாற்போல் மூன்று அடி மூன்று அங்குல உயரமே உள்ள ஒருவரின் படத்தையும் போட்டு அவர் நம்மை இந்த அளவு பீடிகையின் விளிம்பிற்கே அழைத்துச் சென்று ஒரே போடாய் உடைத்த விதம் “Highly Commendable” எனலாம்.

 
இனி பிரும்மச்சாரி பற்றிய விளக்கம் மிக அருமை; இனி நான் சொல்ல விழைவதெல்லாம் அனுதாப அலையை காட்சிப் பேழையைச் சற்றே கதாநாயகன் புறம் நகர்த்தி 
“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும்
கல்யாண மாலை!
இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே
தேவன் அன்று!”
என்பதே!!

எட்டிய MONEYகள் விமர்சனம்

கோடிக்கணக்கில் பணம் சேர்த்து விட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில், இப்பவோ அப்பவோ காலன் வரும் வேளை காகிதப்பணம் குறித்தக் கவலை கணவனுக்கு.
 
“காசு, பணம், துட்டு, money, money”, அது படுத்தும் பாடு வியக்க வைக்கிறது.

 
தான் இறக்கும்போது தன்னுடனேயே புதைக்கும் படி கணவன் கேட்டதற்கிணங்க கோடியை ஆயிரம் ரூபாய்களாக மாற்றி அவருடைய பழைய டைரிகள் என ஏமாற்றி அவரைப் புதைத்த குழியிலேயே புதைத்து விட்டு வந்தவுடன் மனைவியிடம் அவளுடைய தம்பி சந்தேகமாய் கேட்டதற்கு


”நானா பணத்தின் மதிப்புத் தெரியாதவள்?
நானா பைத்தியக்காரி?
போடா போக்கத்தவனே .....
நான் அவருடன் சூட்கேஸில் அனுப்பியுள்ள தொகை
By way of Cheque  மட்டுமே;
அதுவும் ’Account Payee only’ என்று ’Special Crossing’ செய்யப்பட்டது.
அதுவும் Payable .... in favour of 'MY BELOVED HUSBAND', only ;
அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே வங்கியிலிருந்து
எடுக்க முடியாது;
ஏன் அவரே கூட இனி அந்தப் பணத்தை எடுக்க முடியாது;
பைத்தியக்காரா, நான் உன் அக்கா.......டா;
உனக்கு முன்னாலேயே பிறந்தவளாக்கும்” என்றாள்.

 
இதை படித்தபோது எதை நொந்துகொள்வது என்றே புரியவில்லை!!
“போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைப் படைத்தானே” எனப் பாடத் தோன்றுகிறது.

 

“சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”!!

 

கதை- படைப்பு அருமை!!
நன்றி!!
-எழிலி சேஷாத்ரி

13 கருத்துகள்:

  1. திருமிகு வைகோ அவர்களின் தளத்திலேயே பார்த்தேன்
    தங்கள் மனைவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே
    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் தங்கள் துணைவியார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    இதை பெருமையுடன் இங்கு தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கு என் நன்றிகள்.

    மேலும் மேலும் வாராவாரம் இதே போட்டிகளில் தாங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கலந்துகொண்டு, மேலும் பல பரிசுகள் பெற சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையட்டும்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. மிகவும் அருமையான விமர்சனத்துடன் இரண்டாம் பரிசு பெற்றுள்ள தங்கள் துணைவியாருக்கு என் வாழ்த்துக்கள். அவர்களுடைய படைப்பாற்றல் சிறப்பாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஏதேனும் வலைப்பூ உள்ளதா? இல்லையெனில் ஆரம்பிக்க இது ஒரு நல்ல நேரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! இதுவரை வலைப்பூ இல்லை. விரைவில் ஆரம்பிக்க எண்ணியுள்ளேன். வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. துணைவியார் முனைவர் திருமதி. இரா. எழிலி சேஷாத்ரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. தங்கள் மனைவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. தங்கள் மனைவிக்கு, இனிய வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  7. இரண்டாம் பரிசு பெற்ற விமர்சனம் மிக அருமை. உங்கள் மனைவிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    வை.கோ. சாரின் பக்கத்தில் இன்று தான் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு