செவ்வாய், 4 நவம்பர், 2014

திரு வைகோ அவர்களின் சிறுகதைப்போட்டி நிறைவு விழா!-காரஞ்சன் (சேஷ்)

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டி நிறைவு விழா!
வலையுலக சொந்தங்களுக்கு வணக்கம்!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றுவிட்டது

நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் நடைபெற்று வரும் இவ்வேளையில் பல்வேறு விருதுகள் வழங்கி, போட்டியில்  பங்கேற்றவர்களை கெளரவித்து பரிசுமழையில்  நனைய வைத்துக் கொண்டுள்ளார்.  

40 வாரங்களில் 39 வாரங்களுக்கான போட்டியில் பங்கேற்று 26 பரிசுகளை வென்றுள்ளேன். 27வது கதை வரை நான் பெற்ற பரிசுகளைத் தனிப் பதிவாக என் வலைப்பூவில் முன்னம் வெளியிட்டிருந்தேன்.

VGK-25 முதல் VGK-40 வரை என்னுடைய விமர்சனங்கள் ஏதாவது ஒரு பரிசுக்குத் தெரிவாகி, தொடர் வெற்றியை ஈட்டித் தந்தன. என் வலைப்பூ நண்பர்களின் பார்வைக்கு நான் பெற்ற பரிசு விவரங்களைப் பணிவுடன் பகிர்ந்துள்ளேன்.

VGK-25 TO VGK-27 பரிசு குறித்த விவரங்களுக்கான என் பதிவு!
--------------------------------------------------------------------------------------------
VGK-28  "வாய்விட்டுச் சிரித்தால்!"- கதைக்கான இணைப்பு!

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

----------------------------------------------------------------------------------------------
VGK 29 - அட்டெண்டர் ஆறுமுகம் - கதைக்கான இணைப்பு

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


------------------------------------------------------------------------------------------------
VGK 30 - மடிசார் புடவை 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


------------------------------------------------------------------------------------------------
VGK 31 - முதிர்ந்த பார்வை 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


-----------------------------------------------------------------------------------------

VGK 32 - கு ம் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

-----------------------------------------------------------------------------------------------

VGK 33 - எல்லோருக்கும் பெய்யும் மழை

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


------------------------------------------------------------------------------------------------
VGK 34 - ஜ் ஜீ ன் னா .... ஜ் ஜி தா ன்

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


------------------------------------------------------------------------------------------------

VGK 35 - பூ பா ன்

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

------------------------------------------------------------------------------------------------

VGK 36 - ’ லிஸபத் டவர்ஸ் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


------------------------------------------------------------------------------------------------

VGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு .... ! 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


----------------------------------------------------------------------------------------------

VGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


-----------------------------------------------------------------------------------------------
VGK-39 - மா மி யா ர் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


-----------------------------------------------------------------------------------------------

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4] 

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4] 

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவுப்பகுதி 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:


------------------------------------------------------------------------------------------
திரு வைகோ சார் அவர்களைப் பற்றியும், நடுவரைப் பற்றியும், இந்தப் போட்டியைப் பற்றியும் என் கருத்துகளைப் பகிர்ந்த என் கடிதம்:

நேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S. SESHADRI அவர்கள் 

---------------------------------------------------------------------------------------------
VGK-25 முதல் VGK-40 வரை  தொடர்ச்சியாக ஏதோவொரு பரிசுக்குத்தேர்வாகி வந்துள்ள என்னைக் கெளரவிக்கும் விதமாக என் பெயரில் ஒரு விருதை அறிவித்த திரு வைகோ சார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

அது குறித்த விவரங்கள்! என்பெயரில் அமைந்த விருதில் எனக்கும் ஒரு பரிசு!

VGK-01 முதல் VGK-40  வரையிலான 40 கதைகளில், ஏதாவது 30 க்கு மேல் 39 கதைகள் வரை விமர்சனம் எழுதி  அனுப்பியுள்ளவர்களுக்கு மட்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.. ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகை ரூ. 75 [ரூபாய் எழுபத்து ஐந்து ]

சேஷ் விருது” - புதிய சில விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் !
 [ Part-2 of 4 ]  

-----------------------------------------------------------------------------------------------


அதிகமான வெற்றிகளைப் பெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களைக் கெளரவிக்கும் வகையில் VGK-01 To VGK-40 ஒட்டுமொத்த வெற்றியாளர்களின் பட்டியலில் 20% .... அதாவது   எட்டு முறைகள்  அல்லது  எட்டு முறைகளுக்கு மேல் பரிசுகளை வென்றுள்ளவர்களுக்கு கீதா விருதுவழங்கப்படுகிறது. அந்த விருதும் மூன்றாம் இடம் பிடித்த எனக்குக் கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------
போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த திரு வைகோ அவர்களின் திறமையும், அயராத உழைப்பும் நம்மையெல்லாம் வியப்படைய வைக்கின்றன.
நடுவர் பணியில் மிகவும் திறம்படச் செயல்புரிந்த மரியாதைக்குரிய ஜீவீ ஐயா அவர்களும் நிச்சயம் மிகவும் பாராட்டப் படவேண்டியவர்.

இருவருக்கும் என் பணிவான வணக்கங்கள்! நெஞ்சார்ந்த நன்றிகள்! வாழிய பல்லாண்டு! வாய்ப்பளித்து, வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி, பல்வேறு கோணங்களில் விமர்சனம் எழுத வைத்து சாதனை படைத்த இருவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
 


நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வாசக அன்பர்கள் அனைவரையும் திரு வைகோ சார் அவர்களின் வலைப்பக்கத்திற்கு வருகை தர அழைக்கிறேன்!



நன்றியுடன்

காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 28 அக்டோபர், 2014

ஒட்டுவாரின்றி உடைகிறதோ? -காரஞ்சன்(சேஷ்)


                                                          ஒட்டுவாரின்றி உடைகிறதோ?

ஏற்றிவைத்த விளக்குகளால்
எத்தனையோ இரவுகளில்
வெளிச்சம் பரப்பிய
விளக்குமாட விழிகள்!

எத்தனையோ மனிதர்கள்
மி(ம)தித்தும்
நித்தம் கடந்திருப்பர்
நிலைப்படியை!

எத்தனை குழந்தைகள்
ஏறிநின்று முகம்காட்டி
கெட்டியாய்ப் பிடித்திருப்பர்
எட்டுக்கம்பி ஜன்னலினை!

கட்டியவர் மட்டுமின்றி
ஒட்டிய உறவுகளும்
கைவிட்டுச் சென்றனரோ?
ஒட்டுவார் யாருமின்றி
உடைகிறதே வீடொன்று!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: நன்றி!-மாயவரத்தான் MGR அவர்களின் வலைப்பூ!

செவ்வாய், 21 அக்டோபர், 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!- காரஞ்சன்(சேஷ்)


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இந்த தீபாவளி நன்னாளில், பழைய தீபாவளி மலர்களில் வெளிவந்த, நான்

இரசித்த  சில படங்கள்  தங்களையும் மகிழ்விக்கும் என எண்ணுகிறேன்!


நன்றி: ஆனந்தவிகடன் தீபாவளி மலர்:1961

நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்: 1959

                                               
                                             நன்றி: கல்கி தீபாவளி மலர்:1950


                                    நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்:1954


                                         நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்:1969

எல்லோருக்கும்  மகிழ்வளிக்கும் நன்னாளாய் தீபாவளித் திருநாள் அமைய
எனது வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)

தீபாவளி வாழ்த்துப்பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மழையடிச்சு மரம் அழுதா?- காரஞ்சன்(சேஷ்)


மழையடிச்சு மரம் அழுதா?

சுத்தி மணலிருக்க
சூரியனும் சுட்டெரிக்க
படர்ந்த மரமொண்ணு
பசுங்குடையாய் விரிஞ்சிருக்க

சொத்து எதுவுமில்லை
சொந்தபந்தம் ஏதுமில்லை!
சேத்தைப் பிசைஞ்சு வைச்ச
செவுறுகளே என் வீடு!

பச்சை மரத்தினிலே
பதிஞ்ச ஆணிபோல
நெஞ்சுக் குழிபாரம்
நித்தம் எம் பாட்டினிலே!

செவுத்துக்குள்ள நான்பாட
செவிமடுக்க வளைஞ்ச மரம்!
மழையடிச்சு மரம் அழுதா
மண்குடிசை தாங்கிடுமா?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 18 அக்டோபர், 2014

வரிக்கு வரி! -காரஞ்சன்(சேஷ்)


வரிக்கு வரி!

முகவரி தேடிவந்து
அகம்கவர்ந்த சுகவரிகள்!

புரிதலின் வெளிப்பாடு
விரிகிறதோ வரிகளிலே!

சரியான புரிதலுக்கு
வரிவிலக்கில் இடமுண்டு!

வரிவடிவில் வந்திங்கு
வாரி அணைக்கின்றார்!

பிரிவின் துயரத்தைப் 
பரிவால் தணிக்கின்றார்!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு நன்றி: மாயவரத்தான் MGR அவர்களின் வலைப்பூ

புதன், 15 அக்டோபர், 2014

இதயத்தில் ஓர் உதயம்! -காரஞ்சன்(சேஷ்)


 
இதயத்தில் ஓர் உதயம்!


படிந்த புழுதியை
எப்போதாவது வரும் மழை
கழுவிக் களைவதைக்
கண்டு களிக்கையில்.....
 
முகமறியா மனிதர்களை
சுகமான குரலால்
துதிபாடித் துயிலெழுப்பும்
குயிலோசையைக் கேட்கையில்..
 
குரைத்துத் துரத்தும்
நாய்களுக்கிடையில்
எனைப் பார்த்து
வாலாட்டும் நாயினைக் காணநேர்கையில்.....
 
விரிந்த வானில்
இருளும் வேளையில்
தனித்துப் பறக்கும்
பறவையைப் பார்த்து வியக்கையில்....
 
ஒடுங்கிய தேகமும்
இடுங்கிய கண்களுமாய்
"இரட்டை மல்லி" எனக்கூவி
விற்கும் கிழவியை வியந்து பார்க்கையில்...
 
கடந்து செல்லும் ஊர்தியில்
கையசைத்துச் செல்லும்
மழலைச் செல்வங்களின்
மலர்ந்த புன்னகை மகிழ்வளிக்கையில்....


இன்னும் பல்லாண்டு
இவ்வுலகில் வாழ
ஆசை என்மனத்துள்
அன்றாடம் மலர்கிறது!
                                                  -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

துவளாமல் துணிந்து செல்!-காரஞ்சன்(சேஷ்)


        












ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கும் ஒரு திறமை!
உன்னை நீ அறிந்தால்
உயர்வது நிச்சயமே!

தன் திறனைக் கண்டறிந்து
தருணத்தே வெளிப்படுத்த
உயர்வொடு பெரும்புகழும்
உண்டாகும் உலகினிலே!

குறையிலா மனிதர்கள்
குவலயத்தில் யாருமில்லை!
நிறைகளைக் காண்பவர்கள்
நிச்சயம் உயர்ந்தவர்தாம்!

உயர்வினைப் பெற்றிடவே
ஊக்குவித்தல் அவசியமே!
உறவொடு நட்பிற்கும்
உண்டதிலே பெரும்பங்கு!

நண்பர்களாய் நாமிருப்போம்!
நட்பினை வளர்த்திடுவோம்!
நல்லதோர் நட்பிற்கு

நானிலத்தில் மறைவில்லை!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி