வெள்ளி, 21 செப்டம்பர், 2012

DREADFUL FATE !- என் மகளின் கவிதை!


DREADFUL FATE!

Upon this drenched and dried land,

Worn and tired, here I stand!

Memories echo in me,

On my childhood of glee!

When I used to be so careless and free

When I used to wonder upon whatever I see!

And now I stand here,

With my return, so near!

I place my burdens behind me,

And shrink my eyes to clearly see!

A stick in my hand to guide,

I can barely hear him stride!

And each minute by which he nears,

My heart thumps with little fears!

But I can no more wait

For this is meant to be my fate!

"Are you ready?” asks the Death God,

Alas! I have no option but to nod!



-PAVITHRA SESHADRI

கழிவிரக்கம்!- காரஞ்சன்(சேஷ்)


                                                                 
                                                                          கழிவிரக்கம்!
வாழ்க்கைச்சுமை உனை
வளைத்துப் போட்டதனால்
சுள்ளிக்கட்டும் உனக்கு
சுமையாகிப் போனதோ?

வளைந்த கோலொன்று
வழித்துணை யாகுதிங்கே!

களையிழந்த நிலப்பரப்பில்
களைப்பின் மிகுதியில்
தோள்சாய யாருமின்றி
கோல்சார்ந்து நிற்கின்றாய்!

கடந்த காலங்கள் உந்தன்
கண்முன் நின்றனவோ?
நடந்ததெல்லாம் போதும் -இனி
நடப்பதை யாரறிவார்?

கனியாதோ காலமென
கவலையுறும் இவளிடத்தில்
இனியேனும் நீ 
இரக்கம்கொள் இறைவா!
                                               -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

புதன், 19 செப்டம்பர், 2012

பிறை நுதல்!, அரை நிலவு! -காரஞ்சன் (சேஷ்)

                                                          
                                                                   பிறை நுதல்!


ஒட்டும் பொட்டு
உனக்கும் பிடித்ததோ?
பிறைநிலவே!
ஒட்டியிருக்கிறாய்
ஒரு நட்சத்திரத்தை!

-காரஞ்சன்(சேஷ்)



                                                            அரை நிலவு!



அன்று உன்னுள்
அடியெடுத்து வைத்த
ஆம்ஸ்ட்ராங்கின்-
மறைவுக்கு அஞ்சலியோ? -நீ
அரை நிலவானாய்?

                   -காரஞ்சன்(சேஷ்)

படங்கள்  உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தாகம்!- காரஞ்சன்(சேஷ்)



 
தாகம்!
 
 

என்றும் என்னுள்
நீரூற்றாய் உன்
நினைவுகள்!
தனிமை தாகத்தைத்
தணித்துக் கொள்ள!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிள்

சனி, 15 செப்டம்பர், 2012

இமைகள்! - காரஞ்சன்(சேஷ்)

 இமைகளே!
விழிகளின் மொழிகள்
வெளிவரும் வழிகளே!
 
கடைக்கண் பார்வைக்கு
காத்திருக்கும் தருணத்தில்
ஏனோமூடிக் கொள்(ல்)கின்றாய்?
 
பிரிவெனும் துயருடன்
இரவுகள் கழிகையில்
ஏனோ மூடமறுக்கின்றாய்!
 
கண்களின் காதலியே!
உன்வழி ஒருத்தி
உட்புகும் முயற்சிக்கு
ஒத்துழையாமை இயக்கமோ?
                                                      -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

வாசம்!



வாசம்!

மண்வாசம் விளைவிக்கும்
மழைபோல்- என்னுள்ளே
உன்வாசம் உண்டாக்கும்
இன்கவிகள் எத்தனையோ!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

புதன், 12 செப்டம்பர், 2012

பயணம்! -காரஞ்சன்(சேஷ்)




வாழ்க்கைப் பயணத்தில்
பாதைக்கேற்ப
படிகின்றன மாசுகள்!

அன்றாடப் பயணத்திற்கு
ஆயத்தமாவோம்
அகத்தின் அழுக்ககற்றி!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!