உடைந்த படகுகள்!
வாழ்க்கைப் பயணத்தில்
ஓடிக்களைத்து
ஒடுங்கிடும் மனிதர்கள்போல்
நீரலைமீதினிலே
நித்தம் சுமைதாங்கி
ஓ(டி)டாய்த் தேய்ந்து
ஒதுங்கிய படகுகளோ?
சுமந்து மகிழ்வளித்து
சுகவீனமானபின்னர்
அக்கறைகாட்ட ஆளின்றி
இக்கரையில் ஒதுங்கினவோ?
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி; கூகிளுக்கு நன்றி!