பூத்தமலர் காத்திருக்க!
கதவருகில் காத்திருந்து
கண்ணிரண்டும் பூத்ததய்யா!
தொடுத்த மலர்ச்சரமும்
துவளுதய்யா கூடையிலே!
கொடியிடையாள்
பாரமதை
கொள்ளையன்
நீ அறியாயோ?
மனக்கதவை
திறந்தவன் நீ!
மாலையிட
வாராயோ?
விரும்பிய
சேதியொடு
விரைவில்
நீ வந்துவிடு!
அரும்பிய
புன்னகையின்
அர்த்த’மது’
கண்டுவிடு!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!