துயரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துயரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 மே, 2014

உன்னிலும் நான்மேல்தான் -காரஞ்சன்(சேஷ்)

                                   
                                              உன்னிலும் நான்மேல்தான்!
மண்டபத்தைக் கட்டிவைத்த
மன்னவன் யாரோ?
என்நிலையில் இருப்பவர்க்கு
இதுதான் வீடோ?
                      
இறுகிய கருங்கல்லும்
இடம்விடுதே செடிவளர!
இடம்பிடித்தேன் இவைகளுடன்
நானுமிங்கு நடைதளர!
                                 
எலிகளும் கொசுக்களுமே
என்னுடன் வாசம்!             
இரக்கப்படும் தென்றல்வந்து
என்மேல் வீசும்!
                      
வளர்ந்து தேய்ந்தவர்க்கு
வாழ்வில் துயருண்டு!
தேய்ந்து வளர்ந்தவர்க்கோர்
திருப்தியும் அதிலுண்டு!
                      
இரண்டு நிலைகளுக்கும்
என்வாழ்வில் இடமில்லை!
இருப்பதுபோதுமென்றால்
எந்நாளும் துயரில்லை!

வெளிச்சமிட்டு எந்நிலையை
வெளிக்காட்டும் வெண்ணிலவே!
உன்னைவிட நான்மேல்தான்
உடுத்தியுள்ளேன் கந்தையினை! 
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!