மலைக்கோட்டை நகர்வாழும்
மாமனிதர் பேர்தன்னை
வைகோ என உரைத்து
வலையுலகம் போற்றுதிங்கே!
வையகத்தில் கோவென்பார்!
ஆனால் நீரோ
வலையுலகின் கோவானீர்!
நிலையான புகழென்றும்
நிச்சயம் உமக்குண்டு!
அருட்கண் பார்வையினை
அருளிவிட்டாள்
கலைமகளும்!
திறமையுடன் படைக்கின்றீர்
திகட்டாத தெள்ளமுதை!
கண்பட்ட பொருளெல்லாம்
கதைக்கரு ஆவதென்ன?
எண்ணத்தில் வடிவமைத்து
எழுதுகின்றீர்
பலகதைகள்!
ஊருணி நீரன்றோ
உம்கையில் கதைக்கருக்கள்!
வெளிவந்த படைப்புகளோ
விளம்பிடுதே உம்திறத்தை!
திட்டமிட்டுச்
செயலாற்றி
எட்டுகின்றீர்
உம் இலக்கை!
திடமான மனம்கொண்டு
இடர்களுக்கு விடைகொடுத்தீர்!
அறிவித்தீர் போட்டியொன்றை!
அருந்தவப் பயனைடைந்தோம்!
கரும்புதின்னக்
கூலியென்றால்
விரும்பாதோர் யாரிருப்பார்?
வெள்ளியெழும்புகையில்
வெளிவருமே ஒருகதையும்!
வியாழன் உறங்குமுன்னே
விமர்சனங்கள் உமையடையும்!
செவ்வாய் மலராதோ?
என
செய்திக்குக் காத்திருப்போம்!
வாயார வாழ்த்தியங்கு
வந்திருக்கும்
உம்மடலும்!
நடுவர் யாரென்றே
நாமறியா வண்ணம்
கடந்தன சிலவாரம்
காத்திருந்தோம்
விடையறிய!
நடுவரின் சிரமத்தை
நாமறிய ஒருபோட்டி!
விதவிதமாய் விமர்சனங்கள்!
விழிபிதுங்கிப்
போனோம் நாம்!
திறம்பட செயலாற்றி
தேர்ந்தெடுத்த
விமர்சனங்கள்
அறிவித்தது அவர்திறத்தை!
அயராத அவருழைப்பை!
விமர்சனம் எதுவென்று
விளக்கிய விதம்
அருமை!
அன்னாரின் உழைப்பினையே
நன்றியுடன் போற்றிடுவோம்!
நாற்பது வாரங்கள்
விரைந்து கரைந்துவிட
வெற்றிவிழாக் காணும்
வேளையை நாமடைந்தோம்!
திண்ணியராகித்
திறம்படச் செயலாற்றி
எண்ணிய எண்ணமெலாம்
ஈடேறக் காணுகின்றீர்!
அறிவித்தீர் பலவிருதை!
அள்ளிவிட்டீர்
பரிசுகளை!
பேரறிவாளன் திருவுக்கு
வேறேதும் விளக்கமுண்டோ?
தமிழ் வளரத்தொண்டாற்றும்
உமைப்போற்றும்
வலையுலகம்!
ஆழிசூழ் இவ்வுலகில்
வாழிய நீர் பல்லாண்டு!
-காரஞ்சன்(சேஷ்)