மழையடிச்சு மரம் அழுதா?
சுத்தி மணலிருக்க
சூரியனும் சுட்டெரிக்க
படர்ந்த மரமொண்ணு
பசுங்குடையாய் விரிஞ்சிருக்க
சொத்து எதுவுமில்லை
சொந்தபந்தம் ஏதுமில்லை!
சேத்தைப் பிசைஞ்சு வைச்ச
செவுறுகளே என் வீடு!
பச்சை மரத்தினிலே
பதிஞ்ச ஆணிபோல
நெஞ்சுக் குழிபாரம்
நித்தம் எம் பாட்டினிலே!
செவுத்துக்குள்ள நான்பாட
செவிமடுக்க வளைஞ்ச மரம்!
மழையடிச்சு மரம் அழுதா
மண்குடிசை தாங்கிடுமா?
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!