வரிக்கு வரி!
முகவரி தேடிவந்து
அகம்கவர்ந்த சுகவரிகள்!
புரிதலின் வெளிப்பாடு
விரிகிறதோ வரிகளிலே!
சரியான புரிதலுக்கு
வரிவிலக்கில் இடமுண்டு!
வரிவடிவில் வந்திங்கு
வாரி அணைக்கின்றார்!
பிரிவின் துயரத்தைப்
பரிவால் தணிக்கின்றார்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு நன்றி: மாயவரத்தான் MGR அவர்களின் வலைப்பூ